உலகம் வியக்கும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.35 லட்சத்துக்கு அமெரிக்காவில் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
மின்னியல் கோட்பாடு மற்றும் அதன் சிறப்பு சார்பியல் குறித்து ஐன்ஸ்டீனின் அறிவியல் ஆசிரியர் ஆர்தர் கன்வெர்ஸ் 1953-இல் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்து ஐன்ஸ்டீன் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இந்தக் கடிதம், நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நேட் டி சாண்டர்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. ஆரம்பத் தொகையாக சுமார் ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடிதத்தை ஏலத்தில் எடுக்க பலர் போட்டியிட்ட நிலையில், கடைசியாக ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஐன்ஸ்டீனின் கடிதத்தைக் குறித்து பேசிய நேட் டி சாண்டர்ஸ் ஏல நிறுவனத்தின் உரிமையாளர் நேட், ”ஐன்ஸ்டீன் கேள்விகளின் மீதான விவாதத்திலும், அதற்கு சரியாக பதில்களைத் தருவதிலும் மிக சிறப்புடனும் நன்மதிப்புடனும் நடந்துகொண்டார் என்பது தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்