மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆடை மற்றும் பட்டாசு விற்பனை களைகட்டியது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் விற்பனை களைகட்டியது.
ஜவுளி மற்றும் இதர பொருட்களை வாங்க சென்னை தியாகராய நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆடை, பட்டாசு மற்றும் இனிப்பு உள்ளிட்ட திண்பண்டங்களை மக்கள் வாங்கிச் சென்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே துணிக்கடைகள் மிகுந்த சென்னை தி.நகரில் கூட்ட நெரிசல் அதிகரித்து விடும். துணிகள், நகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்து வித பொருட்களும் ஒரே இடத்தில் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைவரும் தி.நகர் நோக்கி படையெடுக்க தொடங்கிவிடுவார்கள். இந்நிலையில் நேற்று, தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால், மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தி.நகரில் குவிந்தனர்.
இதேபோல் வீட்டு உபயோக பொருள்களின் விற்பனையும் சூடுபிடித்தது. இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களின் விற்பனையும் ஒருபுறம் நடந்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணம். பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடியதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் தி.நகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்