டிடிவி தினகரன் ஸ்டாலின் சந்தித்திருந்தால் தவறில்லை எனவும் சந்திப்பு ரகசியமாக இருந்தால் அரசியல் மாற்றத்திற்கான
வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சந்தித்ததாக கூறி அதிமுக
அமைச்சர் உதயக்குமார் பரபரப்பை கிளப்பினார். மேலும் இருவரின் சந்திப்புக்கு பிறகே 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க
வழக்கில் மேல்முறையீடு இல்லை என்ற அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிட்டதாகவும் உதயக்குமார் குற்றம் சாட்டினார்.
இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்தார். மேலும் திமுக தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் டிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு சர்ச்சை
குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், டிடிவி தினகரன் ஸ்டாலின் சந்தித்திருந்தால் தவறில்லை எனவும் சந்திப்பு ரகசியமாக
இருந்தால் அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள், மறைமுக அரசியலை முன்னெடுத்துச் செல்வதாகவும் தமிழிசை சவுந்திரராஜன்
தெரிவித்தார்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்