கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமாக அமையும் வீடுகள், நிறுவனங்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பருவமழை வந்தாலே நோய்களும் வந்துவிடுகின்றன. பெரும்பான்மையான நோய்களுக்கு கொசுக்களே காரணமாக அமைகின்றன. தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு ஆங்காங்கே ஏற்படும் உயிரிழப்புகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமாக அமையும் வீடுகள், நிறுவனங்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொசு ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கட்டடங்களில் கொசுக்களின் இனப்பெருக்கம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு ரூபாய் 5,000 முதல் ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். கொசுக்களின் இனப்பெருக்க தீவிரத்தை பொறுத்து இந்த அபராதம் மாறுபடும். கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும்பட்சத்தில் கட்டங்களின் உரிமத்தை ரத்து செய்வது கூட பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லால் குறிப்பிட்ட இடங்களை பட்டியலிட்டு அங்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தபடுமாறு கூறப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத டயர்கள், தேங்காய் நட்டுகள், தேநீர் கப்கள் போன்றவற்றில் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்