ஹாட்ரிக் சதம் அடித்து விளாசிய விராட் கோலி..!

ஹாட்ரிக் சதம் அடித்து விளாசிய விராட் கோலி..!

ஹாட்ரிக் சதம் அடித்து விளாசிய விராட் கோலி..!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார்.

இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

தொடர்ச்சியாக 3-வது முறையும் இப்போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்துவாரா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி ரசிகர்களை ஏமாற்றாமல் விராட் கோலி இந்த முறையும் சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்தியா மோதிய கடைசி ஒருநாள் தொடரிலும் விராட் கோலி சதம் அடித்து சாதனை புரிந்திருந்தார். தற்போதும் வெஸ்ட் இண்டீஸ் உடன் தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடரில் சதம் அடித்து விளாசியிருப்பது மூலம், எதிரணியுடன் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக  4 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி புரிந்துள்ளார்.

விராட் கோலி சதம் அடித்திருந்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் பெரிதாக ஜொலிக்கவில்லை. விராட் கோலியே தனி ஆளாக வெற்றிக்கு போராடி வந்தார். இருப்பினும் 107 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 35 ரன்களும், ரிஷப் பண்ட் 24 ரன்கள், அம்பத்தி ராயுடு 22 ரன்கள் எடுக்க மற்றவர்கள் யாரும் 10 ரன்களை தாண்டவில்லை. தற்போது சாஹலும், குல்தீப் யாதவும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 42.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. 45 பந்துகள் இன்னும் மீதமிருக்க வெற்றிக்கு இன்னும் 61 ரன்கள் தேவைப்படுவதால் இந்திய அணி வெற்றிக்காக போராடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com