ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சிக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராஜை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையில் மூத்த பேராசிரியராக பணிபுரிபவர் கோவிந்தராஜ். இவர் தனது தொடர்பியல் துறையில் படிக்கும் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மேலும் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவர் சங்கம் சார்பில் ஆடியோ ஆதாரங்களுடன் பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து இந்த குற்றசாட்டு குறித்து பல்கலைகழக துணைவேந்தரிடம் கேட்டபோது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாக தெரிவித்தார். பேராசிரியர் மீது உரிய விசாரணை மேற்கொள்ள குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றசாட்டில் முதல்கட்ட விசாரணையில் தகவல் உண்மையானது என உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்