ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் சாடல்

ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் சாடல்
ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் சாடல்

ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கவலைப்படவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் இன்று பேசுகையில், பதவி கொடுத்து அழகுபார்த்த ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

பதவி போன பிறகே ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர்செல்வத்திற்கு சந்தேகம் வந்தது என தெரிவித்த அவர், முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com