விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜனின் வீடு, அலுவலகங்கள், அவரது மகனுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், தங்கும் விடுதி, அரிசி ஆலை உள்ளிட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கோவை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லையில் உள்ள இடங்களில் சோதனை செய்வதற்காக இன்று காலை முதல் 20 வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் தலைமையில் திசையன்விளை காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?