பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரியானா நீதிபதியின் மகனும் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த். இவர் மனைவி ரீத்து (38), மகன் துருவ் (18). நீதிபதி கிருஷ்ணனின் பாதுகாப்பு அதிகாரியாக மஹிபால் சிங் என்பவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே ரீத்து மற்றும் துருவ் கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட்டுக்குச் சென்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக மஹிபால் சிங் சென்றிருக்கிறார்.
Read Also -> போதையில் மோசமான நடத்தை: மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றார் அம்மா!
அனைத்து பொருட்களையும் வாங்கிய பின் வீடு திரும்பியபோது யாரும் எதிர்பாராதவிதமாக மஹிபால் சிங், ரீத்துவை, துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவர்களது மகன் துருவையும் சுட்டார் மஹிபால். இதில் பலத்த காயமடைந்தவர்கள், இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் மஹிபால் கார் மூலம் தப்பிச் சென்றுவிட்டார்.
Read Also -> வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு வினோத தண்டனை!
இதை நீதிபதிக்கு போன் செய்து சொன்ன மஹிபால், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்.
Read Also -> ’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி!
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரீத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துருவின் உடல்நிலையும் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Read Also -> “சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கவில்லை” - பினராயி விஜயன்
(மஹிபால் சிங்)
அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கடந்த 15 ஆம் தேதி மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'