நடிகர் லாரன்ஸின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பு தருவதாகக் கூறி தெலுங்கு திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர் அடுத்து தமிழ்த்திரையுலகினர் மீதும், பாலியல் புகார்களை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர்.சி உட்பட பலர் மீது பரப்பரப்பு புகார் கூறினார். அந்த வரிசையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மீதும் புகார் கூறினார்.
புகார் குறித்து பதில் அளித்த நடிகர் லாரன்ஸ், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. என் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் ஸ்ரீரெட்டி உண்மையிலேயே சினிமா வாய்ப்புக்காக இதைச் செய்கிறார் என்றால் ஒரு முறை நடித்துக் காட்ட வேண்டும். அவரது நடிப்பு பிடித்திருந்தால் அந்த நேரத்திலேயே வாய்ப்பு தருவதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி அவரின் சவாலை ஏற்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் லாரன்ஸை அவரது இல்லத்தில் சந்தித்து நடித்துக் காட்டியதாகவும், அது அவருக்கும் பிடித்துவிட்டதால் அடுத்தப் படத்தில் வாய்ப்பு வழங்குவதாக உறுதி செய்திருக்கிறார் எனவும் ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் படத்தில் நடிப்பதற்கான முன் பணத்தை பெற்று விட்டதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்