சென்னை மாதவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக அதிமுக வட்டச் செயலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சாதிக்பாஷா என்பவர் எழும்பூர் சூரம்மாள் தெருவில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மருந்துகளை வாங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப்பின் சோதித்து பார்த்தபோது அவர் கொடுத்தது கள்ள நோட்டு என்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை வைத்து தேடும் பணியில் ஈடுபட்ட கடைக்காரர்கள், ரயில்வே காலனி பகுதியில் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
காவல்துறை விசாரணையில் பிடிபட்டவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வனிதா என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக 25-ஆவது வட்டச் செயலாளருமான காமேஷ் குறித்த தகவல்கள் காவலர்களுக்கு கிடைத்தன.
நண்பர்களான இருவரும் மாதவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், வனிதா மற்றும் அவரது தோழி சத்தியலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?