தமிழக அரசு தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு நிலக்கரி வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகமான TANGEDCO, மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதானி குழுமத்திடம் இருந்து ஒரு டன் நிலக்கரி 5 ஆயிரத்து 8 ரூபாய்க்கும், ஸ்ரீ ராயல்சீமா நிறுவனத்திடம் இருந்து 4 ஆயிரத்து 936 ரூபாய்க்கும், யாசின் நிறுவனத்திடம் இருந்து 5 ஆயிரத்து 98 ரூபாய்க்கும் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாவிடம் ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய நிலையில் அதனை விட 150 சதவிகிதம் அதிக விலைக்கொடுத்து தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரு முறை மட்டும் ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தளர்த்தியுள்ளது. பருவமழை காரணமாக நிலக்கரி உற்பத்தி குறைந்திருப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதில் தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம், இதற்காக தேவைப்படும் பட்சத்தில் நிலக்கரியை தனியாரிடம் இருந்து கூட வாங்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!