சுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி

சுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி

சுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி

கார் விபத்தில் படுகாயமடைந்து 15 நாட்களுக்கு மேலாக சுய நினைவின்றி இருந்த பாலபாஸ்கர் மனைவியிடம் அவரது கணவர் மற்றும் குழந்தையின் இறப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் பாலபாஸ்கர் கடந்த மாதம் 25-ம் தேதி தன் மனைவி, மகளுடன் கோயிலுக்குச்சென்று திரும்பும்போது நடந்த கார் விபத்தில் பலத்த காயமடைந்தார். ஒரு வாரமாகத் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அவர், அக்டோபர் 2ம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அந்த விபத்தில் பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினியும் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த அவரின் மனைவி லக்ஷ்மி தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 15 நாட்களாக சுய நினைவின்றி இருந்தார். அதனால் கணவர் மற்றும் மகளின் இறப்பு குறித்து தகவலை அவருக்கு உறவினர்கள் தெரியப்படுத்தவில்லை. இந்நிலையில் சுய நினைவுக்கு வந்த லக்ஷ்மியிடம் இறப்பு குறித்த தகவலை எப்படி சொல்வது என்று உறவினர்கள் செய்வதறியாது தவித்து வந்தனர். 

ஆனால் வேறு வழி இல்லாத நிலையில் கணவன் மற்றும் மகள் இறந்த செய்தியை லக்ஷ்மியிடம் அவரது தாயார் தெரிவித்துள்ளார். தாயாரின் வார்த்தைகளை கூர்ந்து கேட்ட லக்ஷ்மி உடனடியாக எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை என்றும், சிறிது நேரம் கழித்து ''பாலாவும், ஜானியும் போய்விட்டார்கள்'' என்று அவர் தெரிவித்தார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பாலபாஸ்கரின் நண்பர், ''லக்ஷ்மி சுய நினைவிற்கு திரும்பிவிட்டார். தற்போது திரவ உணவுகளை எடுத்துக்கொள்கிறார். நாளுக்கு நாள் உடல்நிலை தேறி வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com