பத்திரிகையாளர்களையும், தலைவர்களையும் அநாகரீகமாக விமர்சித்துப் பேசுவதை பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் ஹெச்.ராஜா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தந்தை பெரியாரை ஏற்கனவே கொச்சைப் படுத்திப் பேசிய ஹெச்.ராஜா, பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாகக் கூறியுள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை கொச்சைப்படுத்திப் பேசியிருப்பதுடன், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை இந்திய விரோதி என கை நீட்டி, ஆவேசமாகவும், ஆணவமாகவும் பேசியுள்ளார் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் நாகரீக அரசியலையும், ஆரோக்கியமான விவாதங்களையும் விரும்புவதாகக் கூறி வரும் பாரதிய ஜனதா தேசியத் தலைவர்கள், ஹெச்.ராஜாவின் பேச்சுகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, ரயில்வே துறையில் அரசு பொறுப்பையும் வழங்கி இருப்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அவதூறாகப் பேசி வரும் ஹெச்.ராஜா மீது பாரதிய ஜனதா தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
Loading More post
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்