அமெரிக்காவில் நடந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் உயிரிழந்தார். அவர் உடலை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி) இருந்து வந்தவர் எம்.வி.வி.எஸ்.மூர்த்தி (80). விசாகப் பட்டனம் தொகுதியில் இருந்து 2 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 6ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அங்கு சென்றிருந்தார்.
அலஸ்கா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார், லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற பசவ புன்னையா, சவுத்ரி ஆகியோரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
மூர்த்தியின் மறைவை கேட்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதலைமைச்ச ருமான சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவரது உடலை, இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்துவருகிறது.
மறைந்த எம்.வி.வி.எஸ் மூர்த்தி, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி ராமராவுக்கு மிகவும் நெருக்கமானர். விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி என்ற கல்வி நிறுவனத்தை தோற்றுவித்த இவர், பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வந்தார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி