நீதிமன்ற அவமதிப்பு உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தன்னை தனது பணியை செய்ய விடுங்கள். இல்லையெனில் சிறையில் அடையுங்கள் எனக் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் நாட்டின் 20 நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினார். பின்னர் தனது பணி மாற்ற உத்தரவையும் அவரே தடை செய்தார்.
நீதிபதி கர்ணனின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. கர்ணன் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்ததால், அவருக்கு எதிராக பிடி வாரண்டும் பிறப்பித்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று ஆஜரானார். நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளாரா என்று கேட்ட நீதிபதிகள், அவரது மனநிலை தெளிவாக இல்லை என்று கூறினர். மேலும், இந்த வழக்கில் அவர் 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளுக்கு பதிலளித்த கர்ணன், என்னை எனது பணியை செய்ய விடுங்கள் இல்லையென்றால் அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூறினார். தேவையென்றால் என்னை சிறையில் அடையுங்கள் எனவும் கூறினார்.
இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு தடை விதித்த கர்ணன், பதிவாளர் அவர்களுக்கு எந்த வேலைகளையும் ஒதுக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai