நீதிமன்ற அவமதிப்பு உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தன்னை தனது பணியை செய்ய விடுங்கள். இல்லையெனில் சிறையில் அடையுங்கள் எனக் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் நாட்டின் 20 நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினார். பின்னர் தனது பணி மாற்ற உத்தரவையும் அவரே தடை செய்தார்.
நீதிபதி கர்ணனின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. கர்ணன் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்ததால், அவருக்கு எதிராக பிடி வாரண்டும் பிறப்பித்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று ஆஜரானார். நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளாரா என்று கேட்ட நீதிபதிகள், அவரது மனநிலை தெளிவாக இல்லை என்று கூறினர். மேலும், இந்த வழக்கில் அவர் 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளுக்கு பதிலளித்த கர்ணன், என்னை எனது பணியை செய்ய விடுங்கள் இல்லையென்றால் அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூறினார். தேவையென்றால் என்னை சிறையில் அடையுங்கள் எனவும் கூறினார்.
இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு தடை விதித்த கர்ணன், பதிவாளர் அவர்களுக்கு எந்த வேலைகளையும் ஒதுக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்