ஆந்திராவில் மருத்துவ தம்பதியினர் 'வணக்கம்' வைத்தே ஒரு கிராமத்தை, திறந்தவெளி கழிப்பிட பழக்கத்தில் இருந்து மாற்றியுள்ளனர்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் சல்லாப்பள்ளி. அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அன்றாடம் தங்கள் காலைக்கடன்களை திறந்தவெளியிலேயே கழித்து வந்துள்ளனர். அதே கிராமத்தில் தனியார் மருத்துமனை நடத்தி வரும் மருத்துவ தம்பதியான ராமகிருஷ்ண பிரசாத் - பத்மாவதி ஆகியோர் திறந்தவெளி காலைக்கடன் கழிப்பதைக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர். அவர்களின் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் அக்கிராம மக்களிடையே எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனையடுத்து 'வணக்கம்' சொல்லும் நூதன பிரசாரத்தை கையில் எடுத்த மருத்துவ தம்பதிக்கு நல்ல பலன் கிடைத்தது.
அதன்படி திறந்தவெளியில் காலைக்கடன் கழிக்க வருபவர்களிடம் சென்று இருகரம் கூப்பி 'வணக்கம்' வைப்பதை வாடிக்கையாக்கியுள்ளனர். இது அக்கிராம மக்களிடையே தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் வணக்கம் வைக்கும் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டனர்.
இதனையடுத்து அக்கிராம மக்கள் தாங்களாகவே கழிப்பறைக் கட்ட முன்வந்துள்ளனர். அரசாங்க உதவியும் கிடைக்க 55 கழிப்பறைகளும், 3 பொதுக் கழிப்பிடமும் அந்தக் கிராமத்தில் கட்டப்பட்டன. கழிப்பறைக் கட்டுதல் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மண்புழு உரம் தயாரித்தல், மரம் நடுதல் போன்ற சுகாதார வேலைகளையும் செய்யத்தொடங்கியுள்ளனர்.
இதற்காக தொண்டு நிறுவனம் மூலம் 17 பேர் நியமிக்கப்பட்டு கிராமத்தை முழு சுகாதாரமாக மாற்றி அமைத்துள்ளனர். இது குறித்து பேசிய மருத்துவ தம்பதியான ராமகிருஷ்ண பிரசாத் - பத்மாவதி, “எங்களின் 'வணக்கம்' பிரசாரம் தொடங்கி 3 மாதத்திலேயே ஒரு கிராமமே சுகாதாரமாக மாறி உள்ளது. நூறு சதவீத சுகாதார கிராமமாக சல்லாப்பள்ளியை ஆந்திர அரசு அங்கீகரித்தது பெருமையான தருணம்” எனத் தெரிவித்துள்ளனர்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்