ரகுபதி ஆணையம் விசாரித்துவந்த புதிய தலைமைச் செயலக கட்டுமான பணி முறைகேடு விவகாரத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2006 -2011-ஆம் ஆண்டு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் சென்னை சிம்சனில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதன்பின் 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து முன்னாள் நீதிபதி ரகுபதி, விசாரணை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டுமான பணி முறைகேடு விவகாரத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்