மாநிலத்தில் தற்போதைய எம்எல்ஏவும் முன்னாள் எம்எல்ஏவும் மாவோயிஸ்ட் கும்பலால் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read Also -> ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
விசாகப்பட்டினம் அரக்கு பகுதியில் கிராமம் ஒன்றிற்கு மக்களை சந்திக்க சென்ற தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோரை மாவோயிஸ்ட் கும்பல் நேற்று படுகொலை செய்தது. இந்நிலையில் எம்எல்ஏவுக்கும் முன்னாள் எம்எல்ஏவுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் கூறி அவர்களது ஆதரவாளர்கள் அரக்கு மற்றும் தும்ப்ரிகுடா ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை சூறையாடினர். அங்கிருந்த ஓலை கொட்டகைக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் தடியடி நடத்தி ஆதரவாளர்களின் வன்முறைகளை தடுத்து கட்டுப்படுத்தினர். இதற்கிடையில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பொது மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Read Also -> இறந்தது கணவர் என தெரியாமல் முதலுதவி சிகிச்சையளித்த மனைவி..!
குறிப்பாக கிராமப்புறங்களுக்கு செல்லும் எம்பி, எம்எல்ஏக்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அம்மாநில தலைமைச் செயலாளர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். உள்ளார்ந்த பகுதிகளுக்கு செல்வதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவசியம் செல்லவேண்டியிருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய தகவல் தந்துவிட்டு செல்லுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, படுகொலை சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆந்திர ஆளுநர் நரசிம்மனும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai