ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்ட பத்திரிகையாளருக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்ராவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி மஞ்சுளா மற்றும் ஜி.எஸ் குல்கர்னி அடங்கிய அமர்வு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரித்தது. அப்போது ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த பத்திரிகையாளரை நீதிபதி மஞ்சுளா கண்டித்தார். ‘இது என்ன மும்பை கலாசாரமா?’என்றும் கேள்வி எழுப்பினார். நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பத்திரிகையாளர்கள் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார்.
இதன் பின்பு, மும்பை மாநகராட்சியின் சட்ட ஆலோசகர் எஸ்.எஸ் பக்கலேவிடம் பத்திரிகையாளகளுக்கு உடை கட்டுப்பாடு இல்லையா என்றும் கேட்டார். அவர் ‘இல்லை’ என பதிலளித்தார். அதன்பிறகு நீதிபதி பத்திரிகையாளர்களுக்கான உடை கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒரு பத்திரிகையாளரிடம் நீதிமன்றம் இப்படி கேள்வி எழுப்புவது இதுவே முதல் முறை.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்