புதுமணப் பெண் விஷம் அருந்தி தற்கொலை !

புதுமணப் பெண் விஷம் அருந்தி தற்கொலை !
புதுமணப் பெண் விஷம் அருந்தி தற்கொலை !

புதுக்கோட்டை அருகே திருமணமான ஆறே நாளில் புது மணப் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை வலப்பிரம்மன்காடைப் பகுதியைச் சேர்ந்த நித்யா என்பவருக்கும், திருநாளூர் தெற்கைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவருக்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருந்து இருவருக்கும் மனகசப்பு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், சுந்தரராஜன் தற்கொலைக்கு முயற்சித்தார். சுந்தரராஜனை, அவரது பெற்றோர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் நித்யாவும் தற்கொலைக்கு முயற்சித்தார். ‌உடனே நித்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நித்யாவின் தந்தை, இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். 


இந்நிலையில் வீட்டுக்கு அழைத்து சென்ற சிறிது நேரத்தில் நித்யா விஷம் அருந்தியுள்ளார். உடனே சுந்தரராஜன் குடும்பத்தாருக்கு தொலைபேசியில் நித்யா விஷம் குடித்து விட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் தகவல் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு நித்யாவை கொண்டு சென்றிருக்கிறார்கள் கொண்டு செல்லும் வழியிலேயே நித்யா உயிரிழந்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து நித்யாவின் உடலை கைப்பற்றிய காவல்துறை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இதனைதொடர்ந்து சுந்தரராஜன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடமும், நித்தியாவின் குடும்பத்தாரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் திருமணமாகி ஆறு நாட்களில் புதுமணப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com