பாஜகவிற்கு எதிராக விமானத்தில் முழக்கமிட்ட சோபியா பெலிக்ஸுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டது.
விமானப் பயணத்தின்போது பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை முன்பு சோபியா பெலிக்ஸ் என்ற பெண் முழக்கங்களை எழுப்பினார். இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். தமிழிசை உள்ளிட்ட 10 பேர் மீது சோபியா குடும்பத்தினர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோபியா தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சோபியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Read Also -> மேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல்
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்