ராமநாதபுரத்தில் 300 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டதாக உமா என்பவர் நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் மனைவி உமா. இவரிடம் சகோதரியின் கணவரான, சினிமா பைனான்சியர் பூபதி ராஜா 300 சவரன் நகைகளை கொடுத்து வைத்திருந்தார். தனது மகனின் திருமணத்திற்காக பூபதி ராஜா நகைகளை கேட்டதை அடுத்து, கூட்டுறவு வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்த போது வழிப்பறி செய்யப்பட்டதாக உமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, உமாவிடம் இருந்து நகைகளை யாரும் வழிப்பறி
செய்யவில்லை என தெரியவந்தது. தனது அக்கா கணவரின் நகைகளை விற்றும், அடகு வைத்தும் செலவு செய்த உமா, அவற்றை திருப்பி கேட்டபோது வழிப்பறி செய்யப்பட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். 6 வருடங்களாக லாக்கரில் வைத்திருந்த நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக விற்று செலவு செய்ததை விசாரணையில் உமா ஒப்புக்கொண்டார்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்