எரிபொருள் விலை கடும் உயர்வால் விமானப் பயண கட்டணங்கள் 10 முதல் 15 சதவிகிதம் வரை உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் இதனால் கட்டணம் உயர்த்துவது அவசியமாக உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவற்றால் விமான எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தவிர வரி விதிப்பும் தங்கள் துறையை பாதித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடனில் சிக்கியுள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனம் ஆயிரத்து 323 கோடி ரூபாய் நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இதே போல ஏர் இந்தியா நிறுவனமும் பெரும் நஷ்டத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. அந்நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை விற்கும் அரசின் திட்டமும் தோல்வியடைந்துள்ளது
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்