இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைக்கவசம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதையும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், விபத்துகளின்போது தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்