ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு குறித்த விசாரணைக்காக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அரசு அதிகாரிகள் 5 பேர் உள்பட 16 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ப.சிதம்பரத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில், டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை தொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேள்விகளுக்கு சிதம்பரம் அளித்த பதில்களை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்