ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 139.99 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகவே தொடர வேண்டும் என வாதிட்டார். அப்போது மத்திய அரசு தரப்பில், அணை நீர்மட்டத்தை இரண்டு அல்லது மூன்று அடி வரை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்ற நீதிமன்றம், வரும் 31-ஆம் தேதி வரை அணை நீர்மட்டத்தை 139.99 அடியாகவே தொடர உத்தரவிட்டது. மேலும், தொடர்ந்து அணையின் நிலவரத்தைக் கண்காணிக்க துணைக்குழுவுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையானது செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய தினம் வழக்கு விசாரணையின்போது, கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட திடீரென முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதே காரணம் என கேரள அரசு தமிழகம் மீது குற்றம்சாட்டியது. இந்த நிலையில், தமிழக அரசு இன்று பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது, அதில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 2 டிஎம்சி நீர் திறப்பதற்கு முன்பே இடுக்கி அணையில் இருந்து 14 டிஎம்சி நீர் திறக்கப்பட்டதே வெள்ளம் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழகத்தை குற்றம் சொல்வதை ஏற்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!