வங்கதேச அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹிங்ய குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மியான்மரின் ராகினே மாகாணத்தில் வசித்த வந்த ரோஹிங்ய இன இஸ்லாமியர்கள் மீது, அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் வாழ்வாதாரத்தை தேடி சுமார் 7 லட்சம் பேர் வங்கதேசத்தில் அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக அவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு மியான்மர் அரசு முன்வந்துள்ளது. இந்நிலையில் அகதிகள் முகாமில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், வெள்ளம் மற்றும் நோயால் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அவர்களை காப்பாற்றுவதற்கு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ரோஹிங்ய இன இஸ்லாமியர்களின் ஒரு தலைமுறையே அழியும் ஆபத்து ஏற்படலாம் என்றும் யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளை நோயில் இருந்து காப்பாற்றி, அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க, போதிய கல்வியறிவு புகட்ட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கதேச அகதிகள் முகாமில் தற்போது 6 லட்சம் பேர் வரை வசித்து வருவதாகவும், அவர்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!