இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4ஆவது டெஸ்ட் ஹிமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்து வருகிறது.
இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட்டுக்கு விளையாடிய ஹசல்வுட், அஸ்வின் பந்துவீச்சில் முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் உள்ள நடுவரும் அதனை அவுட் என அறிவிக்க, இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான விஜய், பேட்டிங் செய்வதற்கு தயாராவதற்காக ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். ஆனால், முரளி விஜய் சரியாக பந்தை கேட்ச் செய்யவில்லை என்று கூறி மூன்றாவது நடுவர், ஹசல்வுட் அவுட் இல்லை என அறிவித்தார். மூன்றாவது நடுவரின் இந்த முடிவு அதிகம் உணர்ச்சிவசப்படாத இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதை, அவரது முகம் காட்டியது. ஆனால், மூன்றாவது நடுவரின் இந்த அறிவிப்பு இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அடுத்த இரண்டாவது பந்தில் ஹசல்வுட்டை எல்பிடபிள்யூ முறையில் அஸ்வின் வெளியேற்றினார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி