முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் காலமானார். வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா தீ மூட்டினார்.
Read Also -> மத்திய அரசு செய்த மீட்பு நடவடிக்கைகள் என்ன? - பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட்
Read Also -> முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது !
டெல்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தலில் இருக்கும் வாஜ்பாயின் அஸ்தியை அவரது வளர்ப்பு மகள் நமிதா மற்றும் பேத்தி நிகாரிகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து கங்கை நதியில் கரைக்கப்பதற்காக டெல்லியிலிருந்து ஹரித்வாருக்கு ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாயின் அஸ்தி கொண்டு வரப்பட்டது. பின்னர் ஹரித்வாரின் முக்கிய சாலைகளின் வழியாக வாஜ்பாயின் அஸ்தி திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
Read Also -> “தாய்க்குலத்தை முதுகில் சுமந்து மீட்ட மீனவர்” - குவியும் சல்யூட்கள்
Read Also -> மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு
இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் கங்கை கரையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அங்கு வாஜ்பாயியின் அஸ்தியை குடும்ப உறுப்பினர்கள் கரைத்தனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!