தமிழகத்தில் இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் இயற்கை எரிபொருள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இயற்கை மூலிகை மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் தயாரிக்கலாம் என கூறி வந்த ராமர்பிள்ளை ஆகஸ்ட் 15 முதல் எரிபொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இயற்கை எரிபொருள் தயாரிப்பு குறித்த ஆய்வு கூடத்தை சென்னை நொளம்பூரில் இன்று திறக்க இருந்தார். அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆய்வு கூடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு கூடம் அமைப்பதற்கான சான்றுகளை காவல்நிலையத்தில் வைத்து சரிபார்த்தனர்.
இதனை தொடர்ந்து முறையான அனுமதி பெற்ற பின்னர் கூடத்தை திறக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமர்பிள்ளை கூறுகையில், “நொளம்பூரில் ஆய்வு கூடம் திறப்பதாக இருந்தோம். காவல்துறையினர் அதனை விசாரித்து சென்றுள்ளனர். எரிபொருள் தயாரிப்பு ஆலை அமைக்க விருதுநகரில் உரிமம் பெற்றுள்ளோம். இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் கட்டாயம் ஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய்க்கும் கிடைக்கும். அத்துடன் ஒரு மெகாவாட் மின்சாரம் 1000 ரூபாய்க்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!