ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ போன் 2 இன்று விற்பனைக்கு வந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் 41வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், முகேஷ் அம்பானியின் மகளுமான ஈஷா அம்பானி, தங்கள் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார். ஏற்கனவே ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.1,500 கட்டணத்தில் சில சலுகைகளுடன் ஒரு போன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ போன் 2 என பெயரிடப்பட்டது.
அத்துடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அறிவித்தபடியா ஜியோ போன் 2 இன்று முதல் விற்பனைக்கு வந்தது. நாளை முதல் இது இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதில் ஜியோ போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே (KaiOS) ஆப்ரேடிங் சிஸ்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் மைக்ரோ சிப் மூலம் கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜை இணைக்க முடியும். 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2 எம்.பி பின்புறம் கேமரா உள்ளது. அத்துடம் 2 எம்.பி விஜிஏ செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து அப்ஸ்களையும் பயன்படுத்த முடியும்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!