ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு விரைவில் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
ஆன்லைன் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு ரயில் பயணிகளுக்கு இலவச ரயில் பயண காப்பீட்டை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. அதன்படி எதிர்பாராதவிதமாக நடைபெறும் ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படுகிறது. ரயில் விபத்து மூலம் உடல் ஊனம் ஏற்படுபவர்களுக்கு ரூபாய் 7.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் வழங்கப்படுகிறது. காப்பீட்டிற்காக ஐஆர்சிடிசிக்கு பயணிகள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு விரைவில் நிறுத்தப்படும் என ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்காக வெப்சைட் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ரயில் பயணிகள் டிக்கெட்டை புக் செய்யும் போது, காப்பீடு எடுக்கிறீர்களா..? வேண்டாமா..? என்று கேட்கிற வசதியும் விரைவில் செய்து கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் காப்பீட்டிற்கான தொகை எவ்வளவு எனத் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்