திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இந்நிலையில் திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். கருணாநிதி மறைவை தொடர்ந்து கட்சி ரீதியாக அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி