‘விஸ்வரூபம் 2’படத்திற்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் 22 இடத்தில் வெட்டு கொடுத்துள்ளதாக தலவல் கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படம் நாளை வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் இஸ்லாமிய தீவிரவாதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது வெளியாகிறது. இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இதில் கமல்ஹாசன் ரா அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பூஜா குமார், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைத்துறை 22 இடங்களில் கட்ஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் சிலரை மையப்படுத்தியுள்ள வசனங்களையும் நீக்கியுள்ளது. பல கட்ட தணிக்கைக்கு தீவிரமாக உட்படுத்திய பிறகு இதற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ‘விஸ்வரூபம்2’ படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, இப்படத்துக்கு எதிரான மனுவை நீதிபதி சுந்தர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை, எவ்வித தடையும் இல்லாமல் நாளை உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாகிறது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide