'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு !

'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு !
'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு !

திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர். ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை அவசர வழக்காக இரவே உயர்நீதிமன்ற விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கின் தீர்ப்பு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் மறைவால் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்திற்கும் நாளை விடுமுறையாகும். இருப்பினும் சிறப்பு வழக்காக இன்று காலை நீதிமன்ற அறை எண் 1ல் நாளை விசாரணை தொடங்கியது.

அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது அதில் " திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கியது அரசின் கொள்கை முடிவு. திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு எதிரான 4 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனையடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com