சினிமா பாணியில் பழிக்கு பழி தீர்த்த மகன் ! நடந்தது என்ன ?

சினிமா பாணியில் பழிக்கு பழி தீர்த்த மகன் ! நடந்தது என்ன ?
சினிமா பாணியில் பழிக்கு பழி தீர்த்த மகன் ! நடந்தது என்ன ?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது தாயை கொலை செய்த நபரை 4 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மகன் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு பணம் வாங்கல், கொடுக்கல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சங்கர சுப்பிரமணியன் 2015-ம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று மலையப்பட்டி பகுதியில் சாலையில் நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை மீட்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 2014-ம் ஆண்டு ரமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக சங்கர சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை கொலை செய்ய ரமணியின் மகன் திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைதான 6 பேரையும் சிறையில் அடைத்து தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com