திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே கருணாநிதி நலம் பெற வேண்டி முழக்கமிட்டனர். ஏராளமான பெண்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனை அருகே குவிந்துள்ளனர்.
கொட்டும் மழையிலும் திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நலம் தொடர்பாக காவேரி மருத்துவமனை சார்பில் சற்று நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், பொன்முடி, வாகை சந்திரசேகர், உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அதேபோல், உதயநிதி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட உறவினர்கள் பலரும் மருத்துவமனையில் வருகை தந்தனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!