இந்து மத இதிகாச நூலான மகாபாரதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கமல் வெளியிட்டதாக இந்து மக்கள் கட்சியினர் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, கமலஹாசன் மீது, கும்பகோணம் 2 வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மனுவை இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலா தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சூதாட்டத்தை ஊக்குவிப்பது போன்றும், பெண்களை வைத்து சூதாடுவதை அங்கீகரிப்பது போன்றும் மகாபாரத நூலால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவது போலவும் கமல்ஹாசன் பேசியதாக கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு அபராதம் விதித்து, அதிகபட்ச தண்டனை வழங்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டில், நெல்லை மாவட்டம் வள்ளியூரிலும் கமல்ஹாசன் மீது ஏற்கனவே, வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனிடம், பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகரிப்பது குறித்து கேட்டபோது, பெண்ணை வைத்து சூதாடிய கதை இடம் பெறும் மகாபாரதத்தை மகிழ்வுடன் படிக்கும் நிலை உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix