பொங்கி வரும் காவிரி: மக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

பொங்கி வரும் காவிரி: மக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
பொங்கி வரும் காவிரி: மக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்றில் இறங்க வேண்டாம் என ஏற்கெனவே தண்டோரா, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆறு மற்றும் ஏரியில் குளிக்கச் செல்லும் போது அதற்குரிய பாதுகாப்பான இடங்களை மட்டும் பயன்படுத்தவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com