நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது மக்கள் மன்றப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து அண்மையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இதையடுத்து, அவரை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளும் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
மன்றத்திலிருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் இன்று ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். மன்றத்திலிருந்து அவர் நீக்கப்படவில்லை என தலைமை நிர்வாகி சுதாகர் தெரிவித்திருக்கிறார். அரசியலில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள ரஜினி, தனது கட்சி மற்றும் கொள்கைகளை நேரம் வரும்போது அறிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், ரஜினியை சந்தித்துப் பேசியது குறித்து தமிழருவி மணியனிடம் கேட்டபோது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம் வெளிவந்த பிறகு, தனது அரசியல் பணியை ரஜினி தொடங்குவார் எனத் தெரிவித்தார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்