இடிந்த பாலம் சீர் செய்யப்படாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் நிகழ்வு குஜராத்தில் நடைபெறுகிறது.
குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்தில் நைகா மற்றும் பேராய் கிராமங்களுக்கு இடையே ஓடும் ஆற்றைக் கடக்க பாலம் ஒன்று இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இந்தப் பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் முதல், வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை உடைந்த பாலத்தின் ஒரு பகுதியில் மதகுகளை பிடித்தவாறே நடந்து மறு கரைக்கு செல்கிறார்கள்.
பள்ளி மாணவ, மாணவிகளை பெரியவர்கள் கைப்பிடித்து மறுபுறம் செல்ல உதவுகிறார்கள். ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்தே இந்தப் பயணத்தை மக்கள் மேற்கொள்கிறார்கள். இவ்வாறு செல்ல முடியாவிட்டால், 10 கிலோமீட்டர் சுற்றிச்செல்ல வேண்டியிருக்கும் என்பது இவர்களின் நிலை. பாலம் இடிந்து 2 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேடா மாவட்ட ஆட்சியர் ஐகே படேலிடம் கேட்டபோது, விரைவில் பாலத்தை கட்டும் பணிகள் நடைபெறும் என்று உறுதி அளித்துள்ளார்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!