ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் போன் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஜியோ சிம் நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றது. அதற்குக் காரணம் அன்லிமிடெட் 4ஜி இணைய சேவை இலவசம் என்பதால்தான். ஜியோவின் வருகைக்குப் பிறகு மற்ற சிம் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்தன. பல நிறுவனங்கள் ஜியோவின் இலவச இணைய சேவை ஆஃபர் முடியும் வரை நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை. சில சிம் நிறுவனங்கள் ஜியோவிற்கு இணையாக ஆஃபர் வழங்கும் திட்டங்களில் இறங்கினர்.
ஜியோ சீக்கிரமாக வாடிக்கையாளர்களை சென்றடைந்ததற்கு காரணம் இலவச இணைய சேவை மட்டுமின்றி, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற வசதியும்தான். ஜியோவின் வருகைக்குப் பிறகு இந்திய அளவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து என ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. அத்துடன் செல்போனில் பேசுவோரின் எண்ணிக்கையும், நீண்ட நேரம் பேசுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதற்கு காரணம் இலவச செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் ஜியோவின் வசதிதான்.
இந்நிலையில் ஜியோ சிம் நிறுவனத்தை பயன்படுத்துவோருக்கு சரியாக சிக்னல் கிடைப்பதில்லை, சப்-வேக்களில் சிக்னல் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது. அத்துடன் அவ்வப்போது ஜியோ நிறுவனத்தில் செல்போன் இணைப்புகள் முடங்கியதாகவும் குறை கூறப்பட்டன. இந்நிலையில் தற்போது தமிழக அளவில் ஜியோ செல்போன் அழைப்பு முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பலரும் செல்போன் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். இந்த அழைப்பு சேவை சிக்கல் சில மணி நேரங்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?