தாயுணர்வு என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் பொருந்தும். அப்படித்தான் ஒரு தாய் யானை தனது போராட்டம் மூலம் தனது குட்டியை பத்திரமாக ஒரு குழியில் இருந்து வெளியேற்ற போராடியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வந்த 3 காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் நுழைந்தன. விளைநிலங்கள் வழியாக வந்த யானைகள் 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. கிணற்றின் சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படாத நிலையில், அங்கிருந்து வெளியேறத் தெரியாமல், மூன்று யானைகளும் தவித்துவந்தன. அதில் ஒரு குட்டி யானையும் அடங்கும்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிணற்றில் ஒரு பகுதியை தோண்டி, யானைகள் வெளியேறுவதற்கு பாதை அமைத்தனர். அந்த வழியாக வெளியேற்றப்பட்ட 3 யானைகளும், பின்னர் கடம்பூர் வனப்பகுதிக்குள் விரட்டிவிடப்பட்டன. இந்த மீட்பு முயற்சியில் தனது குட்டி யானையை வெளியேற்ற தாய் யானை பட்டப்பாடு, காண்பவரை கண்கலங்கச் செய்தது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்