உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று பதவி ஏற்கிறார்.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சர் பதவிக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின
இதனிடையே லக்னோவில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் சட்டமன்ற குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். மதியம் 2.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'