பிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு

பிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு
பிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் இன்று சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுயிருகிறார்.  4 நாட்கள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால், முதல் இரண்டு நாட்கள் ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்றார். நேற்றைய தினம் பா.ஜ.க. வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரை அவர் சந்தித்தார்.

4வது நாளான இன்று பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, காவிரி விவகாரம் ஆகிய பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com