கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி 15 நாள் நீதிமன்ற காவல் முடிந்து நேற்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தபட்ட நிலையில் நிர்மலாதேவியை குரல் மாதிரி சோதனைக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி மனுவின் மீதான உத்தரவை இன்று பிறப்பிப்பதாக தெரிவித்து நிர்மலாதேவியை இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் நிர்மலாதேவி இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நிர்மலா தேவியை குரல் மாதிரி சோதனைக்கு சென்னை அழைத்துச் செல்ல அனுமதி மறுத்துடன் மதுரை மத்திய சிறையில் வைத்து குரல் மாதிரி சோதனை செய்யும் நிபுணர்கள் மூலம் குரல் மாதிரி சோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நிர்மலாதேவியின் நீதிமன்ற காவலை வரும் 21ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குரல் மாதிரி சோதனை செய்ய மதுரை மத்திய சிறையில் போதிய தொழில்நுட்ப வசதியில்லாததால் சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்ல கோரி சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விரைவில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரித்துள்ளனர்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!