தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறக்காத வகையில் நிரந்தரமாக மூடவேண்டும் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை அவர்களின் எதிர்காலம் கருதி திரும்பப்பெற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுமட்டுமில்லாமல் இறந்தவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும், விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் நிலை குறித்து முழுமையாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். போலீசார் அவர்களை தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ஏராளமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திரேஸ்புரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!