யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
கர்நாடகத் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “பாஜக மீது நம்பிக்கை வைத்துதான், கர்நாடக மக்கள் அதிக இடங்களை அளித்தனர். கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அனைத்து உரிமையும் பாஜகவுக்கு உள்ளது. ஜனநாயகத்தை நாங்கள் எந்த விதத்திலும் மீறவில்லை; தார்மீக அடிப்படையிலேயே ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். குதிரை பேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியடைந்தும், முதலமைச்சரே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தும் காங்கிரஸ் எதை கொண்டாடுகிறது ?. கர்நாடக தேர்தல் மூலம், காங்கிரஸ் கட்சி தனது சுயமரியாதையை இழந்துவிட்டது. காங்கிரஸ் - மஜத சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து மக்களின் விரோதப்போக்கை கடைபிடிக்கின்றன; இந்தக் கூட்டணி நிலையான ஒன்றாக இருக்காது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். சாதி, மத அடிப்படையில் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சி முயற்சித்தது” என்று கூறினார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி