பிக்பாஸ் 2-வது சீசனிலும் 15 பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதனை தனது இரண்டாவது டீசரில் உறுதி செய்திருக்கிறார் கமல்ஹாசன்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். 15 பிரபலங்கள் ஒரு வீட்டில் பங்கேற்பார்கள். முடிவில் கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கிறார்களோ அவர்களில் ஒருவர் மக்கள் போடும் வாக்கை பொறுத்து வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். மொத்தமாக 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். மக்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு இடையே அடிக்கடி அரசியலும் பேசி வந்தார்.
இதனிடையே பிக்பாஸ் 2 பாகம் விரைவில் வெளிவர இருப்பதாக தகவல் கசிந்தது. அதனை கமல்ஹாசனும் அண்மையில் உறுதி செய்தார். இந்நிலையில் பிக்பாஸ் 2 பாகம் தொடர்பான இரண்டாவது டீசரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கடந்த முறை 15 பேர் போட்டியாளராக பங்கேற்ற நிலையில் இந்த முறையும் 15 பேர் அதில் பங்கேற்க உள்ளனர். 60 கேமராக்கள் அவர்களை கண்காணிக்க உள்ளன. இருப்பினும் அந்த 15 நபர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நல்லவர் யார்.. கெட்டவர் யார்..? என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்குமாறும் கமல்ஹாசன் அந்த டீசரில் கூறியுள்ளார்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்